தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday 25 January 2015

பாசத்தின் முதல் தெய்வம் அன்னை (கட்டுரை)

என் அனைத்து பெண் தோழிகளுக்கும் அன்னை தெங்வங்களுக்கும் இக்கட்டுரை சமர்பணம்

தோழிகளே நம் வாழ்க்கையில் பெண்ணாக பிறந்து நாம் நினைத்த செயல்களிலும் வெற்றியடைய செய்தவர்களில் முதல் தெய்வம் நம் அப்பா.அம்மா.இவர்களில் நம் மீது தனி கவனத்துடன் முழ பற்றும் கொண்டு நம்மை வழிநடத்தியவள் தான் அம்மா.அத்தகைய அம்மா நம் பழக்கங்களில் உள்ள சிறு தவறுகளையும்.பண்புகளையும் கண்டறிந்து நம்மிடையே மாற்றங்களை ஏற்படுத்திய ஒளிவிளக்கு தான் அம்மா.பெண்களை பொறுத்தமட்டிலும் மிக பாசமுடன் காணப்படுவது தந்தையிடம் தான்.ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் நம்மை முழமையாக வழிநடத்தி செல்பவள் அம்மா.தோழிகளே நம்மில் பலா் இன்று நல்லதொரு நிலையில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கலாம்.ஆனால் நம் அன்னை தெய்வங்களை பற்றி நினைவு கூர்ந்தது உண்டா.நம் வாழ்க்கையில் ஒரு தவறுகள் நடக்கப்படும் பொழுது தான் நம் அன்னை தெங்வங்கள் கண்கலுக்கு புலப்படுவர்கள்.தோழிகளே நம் படித்தவுடன் நமது வாழ்க்கை துணைவருடன் சென்று விடுகிறோம்.ஆனால் நம் தாய் நம்மை அப்பொருட்பிற்கு செல்லும் வரை நம்மை ஒரு பசு தன் கன்றுக்குட்டியை பாதுகாப்பது போல் காத்து நம் வாழ்க்கையில் பாடங்களை கற்றுகொடுத்து மேம்படுத்தியவள் தான் தாய்.இன்றைய சூழ்நிலையில் நம்மை பெற்றெடுத்த அன்னை தெய்வங்களை மகிழ்ச்சியடைகூடியவகையில் என்ன நற்பலன்களை செய்திருக்கிறோம் யோசியுங்கள்.தோழிகளே நாமும் குடும்ப வாழ்க்கையில் ஒரு அன்னையாக செயல்படும் பொழுது தான் தெரியும் அன்னை தெங்வங்கள் நமக்கு செய்த பணிவிடைகளை பற்றி.நமக்கு ஒரு விபரிதம் என்றால் முதலில் ஆதங்கப்படுபவள் தாய்யே.தோழிகளே இவ்வுலகில் என் அன்னையார் தினம் கொண்டாடப்படுகிறது என்றால் நம்மிடையே மிக பாசமுடனும்.அரவணைப்பையும் தரும் பொருள் பெண் என்னும் அன்னையே என்பதை சுட்டி காட்டிவதே ஆகும்.தோழிகளே நாம் துணைவர் விட்டில் வாழம்  பொழுது கூட அங்கு நமக்கு ஏற்படும் மறைமுக பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்பவள் அன்னையே.ஒரு விளக்கில் எரியும் சுடராக கடைசிவரை தன் மானத்தையும் பொருட்படுத்தாது தன் துணைவருக்காவும்.தன் பிள்ளைகளுக்காவும் செயல்பட்டு ஒரு தெய்வமாக விளங்குபவளே பெண்.ஒரு ஆணுக்கு தன் குடும்பத்தின் முலமாகவே உறவு பாசங்கள் பற்றி தெரியும்.அதே போன்று தான் பெண்ணுக்கு தாய்மை என்னும் பந்தத்தின் முலம் தான் பாச உறவுகளை பற்றி அறிகிறோம்.தோழிகளே தாய் என்னும் தெய்வங்களை நம் உயிரினும் மேலாக நினைப்போம்.அவர்களை நம் இறுதி நாட்கள் வரையிலும் குழந்தைகளை போன்று பாதுகாப்போம் அவர்களுக்கு பணிவிடைகள் செய்வதற்கான தருணம் அவர்களின் இறுதிநாட்களின் பொழுது உடன் இருந்து செயல்படுவதே ஆகும்.அவர்களின் இறுதி கால ஆசைகளை நம் கணவர்களின் உதவியுடனும் செய்வோம்.அன்னை என்னும் மாபெரும் தெய்வத்தினை உலகறிய செய்வோம்.
தொகுப்பு: தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

Monday 19 January 2015

பாலிய குற்றங்கள் விழிப்புணர்வு தொகுப்பு

உலகில் ஆண் பெண் இருவரும் சமம் என்பது ஆதிகாலம் முதல் இன்று வரை பெண் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கும் ஆர்வர்களின் ஒருமித்த குரல்.அப்படிபட்ட இந்த சமுதாயத்தில் நம் பெண் தோழிகளுக்கு இன்றைய சூழ்நிலையில் அவர்கள் செல்லும் இடங்களில் ஒரு பாதுகாப்பு அற்றநிலை காணப்படுகிறது.இவற்றின் பின்னனியில் காணப்படும் அந்த கொடிய குற்றவாளிகள் யார்.அனைத்து துறைகளிலும் நாம் முன்னோறிய இன்றைய சமுதாயத்தில் நம்மை சுதந்திரமாக நம்முடைய பயணத்தை தொடர தடுக்ககூடியவைகள் பற்றிய காண்போம்.இப்பெரிய பாலிய குற்றங்களில் நம் பெண் இளம் குழந்தைகளும் பாதிக்கபடுவது நம்மை கண்ணீர் மல்க வைக்கிறது.சமுதாயத்தில் மதுக்கு அடிமையான ஆண் தோழர்களின் சந்தோஷம் என்று கருதப்படும் மது பழக்கங்கள்.மற்றும் திரைப்படங்களில் நம் பெண் தோழிகளின் காலச்சாரம் அற்ற உடை அலங்கரங்கள்(ஆபாச காட்சிகள்) மற்றும் உலகை ஒன்றினைக்கும் வலைதளங்களில் உள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் கொண்ட வலைதளங்கள்.இவைகளை பார்க்கும் நம் அன்பு தோழிர்கள் மனசாட்சிக்கு விரோதமாக தங்களின் குடும்பத்தில் பெண்கள் தெங்வங்களாக உள்ளனர் என்பதை மறந்து நம் பெண் தோழிகளிடம் அநாகரிமாக நடந்து கொள்கின்றனர்.தோழிகளே நாம்க்கு எற்படும் இக்கொடுமைகளை மறைப்பதால் இன்னும் நம் இனத்தின் மீது ஆண்களின் கொடுர பார்வை அதிகரிக்க தான் செய்யும்.அக்கொடுமை நம்மை மட்டும் ஆட்கொள்ளாது ஒன்றும் அறிய நம் பெண் குழந்தைகளும் பாதிக்கபடுகின்றனர்.
விழிப்புணர்வு வழிமுறைகள் யோசனைகள் நம் தோழிகளின் நலனுக்காக
1.பள்ளி பெண்குழந்தைகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.
2.பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகளை பெற்றோர் அவ்வப்பொழுது கண்காணிக்க வேண்டும்.தாய்மார்கள் தனி பொறுப்புடன் கேட்க வேண்டும்.
3.வயது வந்த பெண் குழந்தைகளிடம் தொலைப்பேசிகளை பயன்படுத்துவதை கட்டுபடுத்த வேண்டும் அல்லது கண்காணிக்க வேண்டும்.
4.வீடுகளில் நம்மை சார்ந்தவர்கள் அறிமுகம் இல்லாதவர்களை தொடர்ச்சியாக அழைத்து வருவதை கண்காணித்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
5.கல்லுரி தோழிகள் காதல் தோழிர்களின் மாயவலைகளில் சிக்கி கொள்ளாது தற்காத்து கொள்ள வேண்டும்.
6.இரவு நேரங்களில் தனியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
7.அலுவலகங்கள்.மற்றும் பள்ளிகள்.கல்லுரி விடுதிகள்.வீடுகளில் பாலிய துண்டுதல் மற்றும் தொந்திரவுகள் இருப்பின் தயங்காது காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டும்.
8.தோழிகளே ஆடைகளில் மிக கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து செல்வதை முடிந்தவரையிலும் தவிர்க்க பாருங்கள்.(நகரங்களில் வசிக்கும் தோழிகளின் கவனத்திற்கு).
9.தீய பழங்கங்கள் உடைய தோழிகளிடம் இருந்து நட்பை துண்டித்து கொள்ள வேண்டும்.அல்லது அத்தோழியை அப்பழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும்.
10.படித்த தோழிகள் கிராமப்புற படிப்பறிவு அற்ற தோழிகளிடம் பாலிய தொடர்பான குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
11.படித்த தோழிகள் தங்களை பாலிய குற்றங்களில் தற்காத்து கொள்ளும் கரத்தே சண்டை பயிற்ச்சியை கற்றுகொள்ள வேண்டும்.
12.அனைத்து பெண்களும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தெரிந்து கொள்ள வேண்டும்.
தொகுப்பு;தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

Saturday 17 January 2015

காதல் ஒரு தோ்வு சிறப்பு தொகுப்பு

என் இனிய அன்பான தோழிகளே 
 காதல் என்பது ஒரு ஆண் மனமும் ஒரு பெண் மனமும் ஒருவரை ஒருவர் மனதளவில் புரிந்து கொண்டு சாதி மதம் கருத்து வேறுபாடுயின்றி இருவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதே காதல் என பொருள்படும்.அத்தகைய காதலில் நம் இளம் தோழிகள் நல்லொதொரு வாழ்க்கை என நம்பி தங்கள் வாழ்க்கையை பறி கொடுக்கும் நிலை இன்றைய சமுதாயத்தில் அறங்கேறி வருகிறது.இதன் காரணம் எங்கு தோன்றுகிறது என்று பார்த்தால் நம் தோழிகள் தான் பழகும் காதல் நண்பரின் முழ 
விபரங்களை பற்றி அறியமால் தங்கள் மனதையும் வாழ்க்கையும் பறிகொடுக்கும் அவல நிலை நடைபெறுவதை நம் அன்றாட நிகழ்வுகளின் முலம் காண கூடியாதாக உள்ளது.இவற்றில் நம் காதல் மற்றும் விரும்பிய வாழ்கை துணைவரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் நம் தோழிகளின் நலனுக்காக
1.நம் மனம் விரும்பிய தோழன் நல்லதொரு படிப்பினையும்.நிரந்தர வேலை வாய்ப்பினையும் பெற்றுள்ளரா.
2.எச்செயல்பாடுகளையும் எளிதில் புரிந்து கொண்டு நடப்பவராக இருக்க வேண்டும்.

Thursday 15 January 2015

சந்தோஷத்தின் பிறப்பிடம் பெண்

அன்பான என் தமிழ் தோழிகளே அனைவருக்கும் இனிய வணக்கங்கள்

தோழிகளே நாம் ஒரு செயலில் இடுபடும் பொழுது அச்செயல்பாடுகளில் வெற்றி கிட்டும் பொழுது நமக்கு அளவிள்ள மகிழ்ச்சி அடைகிறோம்.தோழிகளே குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முதல் பங்களிப்பு நமக்கு தான்.குடுபத்தில் ஏற்படும் ஒவ்வொரு கஷ்டங்களைவும் பொருத்து கொண்டு அவற்றிற்கு ஒரு தீர்வு கண்டு பொது வாழ்வில் மகிழ்ச்சியை காண்கிறோம்.கணவன் மனைவி என்ற பந்தங்களில் கூட ஏற்படும் மனகசப்புகளை மாற்றி சந்தோஷத்தை நிலைநாட்டுபவள் தான் மனைவி.இதே போன்று அன்னை என்னும் பெண்ணாக நம் வாழ்வியில் செயல்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வந்து புது மகிழ்ச்சியை இல்லரத்திற்கு மற்றும் மனதிற்கும் தருபவள்தான் பெண்.குடும்பத்தில் ஒரு நிகழ்வு நடைபெறுமானல் அதில் முழு பங்களிப்புடன் ஈடுபட்டு அதில் முழு சந்தோஷத்தை குடும்பத்திற்கு அளிப்பவள் தான் பெண்.நினைவு கூருங்கள் தோழிகளே நாம் கடந்து வந்த சந்தோஷங்களில் நம் அன்னை என்னும் பெண் தெய்வங்களில் பங்களிப்பை.தாய்மை என்னும் பாசத்தை ஒரு குழந்தைக்கு வழங்கி அக்குழந்தைக்கு மகிழ்ச்சியை தருபவள் தான் பெண்.பள்ளி முதல் நம் திருமண பந்த வாழக்கை வரையிலும் நம் செயல்பாடுகளில் சந்தோஷத்தை அளிப்பவள் தான் பெண்.அதே போன்று சகோதரத்துவத்திலும் கடைசி நாள் வரையிலும் அன்பை பறிமறி நாம் அனைவரும் ஒன்று தான் என்ற மகிழ்ச்சியை நம்மிடம் நிலைநாட்டுபவள் தான் பெண்.மொத்ததில் கடவுளாகவும் அனைத்து பெண் தோழிகளுக்கும் பாசத்தையும் அருளையும் தரும் தெய்வமாக கூட பெண் இருக்கிறாள்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

Monday 12 January 2015

சிறந்த பெண்மணிகள் தமிழ் பெண்கள்


அன்பும் பண்பும் நிறைந்து ஒரு அரவணைப்பை தருபவள் தான் பெண்.ஆம் தமிழ் குலத்தில் பிறந்து வீரசாதனைகளையும் வாழ்கையும் வாழ்ந்து இன்று வரை வீரதிருப்பெயரை நிலைநாட்டி கொண்டிருப்பவர்கள் தான் நம் பழங்கால தமிழ் பெண்கள்.இன்றைய 19ஆம் நுற்றாண்டில் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் கால்தடம் பதித்து சாதனை படைத்து வருகிறோம் நம் தமிழ்பெண்கள்.நாம் துவண்டுவிட கூடாது நமக்கு எற்படும் இடர்பாடுகளை கண்டு.அவற்றில் இருந்து மீட்டெழுந்து சாதனை மற்றும் புதியவாழ்க்கை பயணத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும்.கடமைகள் பல நமக்காக காத்திருக்கிறது.மனதில் புதியமாற்றங்களுடன் புத்துணர்ச்சியுடன் பயணிப்போம் தோழிகளே.வாழ்க்கையில் நாம் எடுக்கும் கோழைதன்மை யுடைய முடிவுகளில் மாற்றங்கள் கொண்டு வருவோம்.இதனால் நாம்மை சார்ந்த பாசமிகு உறவினர்களின்அன்பை பறிகொடுக்கமால் அவர்களுடன் இருப்போம்.நாம் நம்மை குறைந்து மதிப்பிடகூடாது தோழிகளே.பாசத்திற்கு கட்டுப்பட்டு இன்று நம் தோழிகளின் பலர் வாழ்க்கை பறிபோவதை கணகூடியாத தான் உள்ளது.காரணம் நம்மனதில் நாம் எற்படுத்தி கொள்ளும் பொய்மை செயல்பாடுதான்.முதலில் நாம்மை நாமே உணர வேண்டும் அப்பொழுது தான் மனதில் புத்துணர்ச்சி மற்றும் புது வழிமுறைகள் கிடைக்கும்.தோழிகளே நம் தோழிகள் மன கஷ்டத்தில் பரிதவிக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு ஆறுதல் சொல்லும் அன்பு பெண்மணிகளாக மாற வேண்டும்.
தொடரும்......

Sunday 11 January 2015

பெண் பாதுகாப்பு சிறப்பு தொகுப்பு

அன்பான தமிழ் தோழிகளேஅனைவருக்கும் இனிய வணக்கங்கள்

சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதுஅனைத்து பெண் தோழிகளுக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் கல்லுாரி செல்லும் தோழிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு செல்லும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண் தோழிகளும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் இதோ
1.நாம் செல்லும் இடங்களில் நடைபெறும் செயல்பாடுகளை கவனிக்கபட வேண்டும்.
2.ஒருவரிடம் கலந்துரையாடும் பொழுது அவரை பற்றியும் அவரின் செயல்பாடுகளையும் நன்கு கவனிக்க வேண்டும்.
3.நம்மை பற்றிய விபரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது.
4.அன்றாட செயல்பாடுகளில் வித்தியாசமான மாற்றங்கள் தெரியுமானல் அவற்றை கண்கானிக்க வேண்டும்.
5.அடையாளம் தெரியாதவர்கள் பின் தொடர்ந்தால் அருகில் உள்ள இடங்களிலோ அல்லது வீட்டிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும்.

தமிழ் பெண் சமுதாயம் விழிப்புணர்வு கட்டுரை

விழிப்புணர்வு கட்டுரை

சமுதாயத்தின் முதல் அங்கமாக திகழும் தெய்வம் பெண்.அத்தகைய பெண் சமுதாயத்திற்கு இந்நாட்டில் நடக்கும் அவலங்களை பார்த்தால் மனம் கொத்தளிக்கிறது.தோழிகளே நம் தமிழ் பாரம்பாரியம் மிக தொன்மையானது.அத்தகைய பாரம்பரி்யத்தில் பிறந்த நமக்கு பல்வேறு இன்னல்கள் எற்படுகிறது.குறிப்பாக சொன்னால் பெண் சுதந்திரம் இன்று பொய் அளவிளேயே காணப்படுகிறது.ஆம் நாட்டில் நடக்கும் பாலிய குற்றங்கள் மற்றும் குடும்ப கருத்து வேறுபாடு என பலவேறு அவலங்களை சொல்லி கொண்டு செல்லாம்.இத்தகைய மாற்றங்களுக்கு காரணம் எங்கிருந்து தோன்றுகிறது.நம் சமுதாயத்தின் ஏற்படும் காலச்சர மற்றும் மேலைநாட்டு காலச்சர சீரழிவு தான்.பெண்ணாக பிறந்தால் வாழ்க்கையின் முற்பகுதிய பிறந்த வீட்டிலும்.பிற்பகுதி புகுந்த வீட்டிலும் வாழும் நிலைதான்.ஆனால் அவற்றில் நிறைவான மனநிலை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் பெண்கள் எத்தனை சதவிதம்.பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறியகாலங்கள் மறைந்து இன்று பெண்கள் நாட்டில் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆணாதிக்கம் நிறைந்த சூழ்நிலையில் ஒரு பெண்ணுக்கு ஆறுதல் கூறும் நிலைகூட அற்றவுலகமாக சென்றுவிட்டது.அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு முன்னோடியாக திகழும் பெண்களின் சுதந்தரம் சற்று குறைவுதான்.தோழிகளே சமுதாயத்தில் நம் பெண் இனத்தின் மீது பார்க்கும் பார்வைகள் பற்பல.அவற்றில் இருந்து விடுபட மன தையரியத்துடன் விழித்தெழுவோம்.நம் தோழிகளை காப்பற்றுவது நம் கரங்களில் தான் இருக்கிறது.பொருளாதரத்தில் பின்தாக்கிய பல பெண்கள் அவதியுறும் நிலையில் இருந்து மீட்டெடுக்கும் சக்தியாக மாறுவோம்.