தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

Sunday 12 July 2015

தன்னம்பிக்கை பெண்குலத்தின் உயர்வு விழிப்புணர்வு தொகுப்பு

அன்பான தோழிகளே 
 பெண்ணாக பிறந்தால் உலகம் அறிய செய்ய வேண்டும் பெண்மையின் மகத்துவத்தை.அதே போன்று துள்ளி ஒடும் இளம் மானை போன்று நம்முடைய வாழ்க்கை செயல்பாடுகளில் துடிப்புடன் தன்னம்பிக்கையுடன் இவு்வுலகில் களம் இறங்க வேண்டும்.சரித்திரங்கள் நிகழ்ந்திட சாதனை பெண்ணாக மாற வேண்டும் இச்சமுதாயத்தில்.

தோழிகளே நமக்கா இறைவன் அளித்து முதல் சொத்து நம்முடைய அன்னை மற்றும் தந்தைக்கு அடுத்த சொத்து தன்னம்பிக்கை.கல்வி இந்த சொத்துகளை ஒரு பெண் சிறப்புற பயன்படுத்தினாலே வாழ்க்கையின் வெற்றிக்கோட்டையை அடைந்து விடலாம்.இப்பபூமியில் பெண்ணாக பிறந்த நம் வாழ்க்கையில் நமக்கு நடைபெறும் செயல்பாடு்களை கண்டு மனம் களரது அவற்றை எதிர்த்து நிற்கும் பெண்ணாக மாற வேண்டும்.பொறுமை.அடக்கம் கடமை.நேர்மை.போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்ச நெறிகளை பின்பற்றினாலே போதும் வெற்றி பெண்ணாக வாழ்ந்து காட்டலாம்.பெண்களுக்கு எற்படும் தவறுகளை சுட்டிகாட்டும் இச்சமுதாயத்தில் நாம் அவற்றை திருத்தங்கள் செய்யக்கூடிய தன்னம்பிக்கை பெண்ணாக மாற வேண்டும்.

Wednesday 17 June 2015

நம்மால் முடியும் பெண்ணே -சாதனை விழிப்புணர்வு தொகுப்பு

அன்பான தமிழ் தோழிகளே 

மங்கையராக இவ்வுலகில் பிறந்திட நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதற்கு ஏற்றார் போன்று இன்றைய நவின கால உலகில் அனைத்து துறைகளிலும் ஆண் தோழர்களுக்கு இணையாக வளர்ச்சியடைந்து வருகிறது.இன்னும் குறிப்பிடும்படி சொன்னால் ஆண்களை விட ஒரு மடங்கு முன்னேறி செல்லுக்கூடிய அளவிற்கு நமது பெண் சமுதாயம் வளர்ச்சியடைந்து வருகிறது.ஆதிகாலத்தில் தான் நம் பெண்குலம் வீடுகளில் முடக்கப்பட்டு அவர்களின் சாதனைகளையும் உணர்வுகளையும் வெளிபடுத்த முடியாமல் போனது.இன்றைய கால சுதந்திரம் அன்றைய கால பெண்களுக்கு இருந்திருக்கும் பட்சத்தில் இன்னும் எத்தனையோ சாதனையளார்களையும்.அறிஞர்களையும் நாம் பெற்றிருக்கலாம்.மேலும் அடிமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட்டு இருக்கும்.தோழிகளே இவ்வுலகில் பிறவி பெருங்கடலை கடப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.இத்தகைய பிறவியை நம்முடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிபடுத்த சமுதாயத்தில் தனி சாதனை பெண்ணாக திகழ்ந்திட வேண்டும்.

Sunday 31 May 2015

பெண்களை சமுதாயத்தில் தனிமைபடு்த்தி பார்த்தல் விழிப்புணர்வு தொகுப்பு


அன்பான தமிழ் தோழிகளே

ஒரு பெண் வாழ்க்கையின் முதற்பகுதியில் தன் பெற்றோருடனும் வாழ்க்கையின் பிற்பகுதியில் தான் தேர்தெடுத்த வாழ்க்கை துணையுடன் வாழ்கிறாள்.இவற்றில் தன் வாழ்க்கையின் முதற்பகுதியில் மிகுந்த பாசத்தடன் தன் பிற்ந்த விட்டில் வாழும் பெண் தான் செல்ல விருக்கும் புகுந்த விட்டின் நிலவும் சூழ்நிலைகளை பற்றி தெளிவான நிலையில் புரிந்து கொள்ளமால் ஒரு குறிப்பிட்ட நிலையில் நாம் மேற்கொள்ளும் முடிவுகள் நம்மை தனிமைபடுத்தி விடுகின்றன.

தோழிகளே வாழ்க்கையின் திருமணபந்தத்தின் பின்பு கணவனை இழந்தோ அல்லது விவகாரத்து போன்ற பிரச்சனைகளினால் நம் பெண்குலம் தனிமைபடுத்தபடுகிறது.பெண்ணாக பிறந்த நாம் இச்சமுதாயத்தில் எதிர்கொள்ள கூடிய ஒரு மிக பெரிய சவால் நம்மை தனிமைபடுத்தல்.தோழிகளே ஒரு பெண் கணவனை இழந்துவிட்டால் வாழ்க்கை முற்றிலும் இழந்துவிட்டது என்று நினைத்து விட வேண்டாம் தோழிகளே.குடுபத்தில் ஆண் சகோதரர்கள் புரிந்து கொண்டால் நம்மை தனிமைபடுத்தல் என்பது குறையும்.அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.இன்றைய இயந்திர வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத விபத்துக்கள் மற்ற குடும்ப ரீதியான நிகழ்வுகளால் நம் வாழ்கை பறிபோகுகிறது.ஆனால் சில பெண்களின் வாழ்க்கையின் நம்மை அறிந்தே பறிபோவதை நம் கண் முன் நடைபெறும் சம்பவங்களின் கண்கிறோம்.

தோழிகளே ஒரு பெண் தன் கணவனை இழந்து தனிமைபடுத்தும் பெர்ழுது அவளை ஆதரிப்பதை விடுத்து உதசினம் படுத்தி பார்பதிலேயே இச்சமுதாயத்தின் செயல்பாடுகள் உள்ளதை நாம் காண்கிறோம்.தன் குழந்தைகளுடன் அன்றாட பொழுதை ஒவ்வொரு சாவல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருபவள் தான் சாதனை பெண்.இன்றைய சூழ்நிலையில் பெண்களின் மனபக்குவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களை வெறுத்து ஒதுக்குவதை தவிர்த்து அப்பெண்களின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டும்.இன்றைய நிலையில் பொருளாதரத்தில் பின்தாக்கிய பெண்கள் இவற்றில் பாதிப்படைகின்றனர்.இன்றைய தினம் சமுதாயத்தில் கைவிடப்பட்ட பெண்கள் ஏராளம்.அவற்றை ஒவ்வொரு நாளும் கண்டுகொண்டுதான் செல்கிறோம.தோழிகளே பெண்களை பாதுகாக்க சட்டங்கள் பல அரசாங்கள் இயற்றியுள்ளன.இருந்த போதிலும் பெண்கள் தனிமைபடுத்தல் என்பது அறங்கேறி தான் விடுகிறது.

தோழிகளே பெண்களை பொறுத்தமட்டிலும் தன்மானத்துடன் (அவமரியாதை அற்ற வாழ்க்கை) வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.தோழிகளே நம்மில் பலர் நல்ல கல்வி அறிவினை பெற்றும் சிலர் அமைதியற்ற மனநிலையுடன் முடிவுகளை மேற்கொள்கிறோம்.பெண்களை பற்றிய தெளிவான மனநிலையை அனைத்து குடுபத்தின் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மிகசிரமத்தில் இருக்கும் தோழியர்களுக்கு உதவும் சில வழிமுறைகள்
1.ஆதாரவற்ற பெண்களின் தற்சமய நிலைப்படை புரிந்து அவர்களுக்கான மன அமைதிதரக்கூடிய யோசனைகளை கூறலாம.
2ஆதாரவற்ற பெண்களின் பொருளாதார பிரச்சனைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகளை எடுத்துரைக்கலாம்.
3.குடும்ப அங்கத்தினர்கள் பரிதவிக்ககூடிய பெண்ணுக்கு அவற்றில் இருந்து எவ்வாறு மீள்வது தொடர்பான கருத்துகளை கூறலாம.மேலும் சூழ்நிலை மாற்றங்களை புரிந்து கொண்டு பெண்களின் மாறுவாழ்வை பற்றிய யோசனைகளை எடுத்துரைக்கலாம்.
4.தன்னம்பிக்கை.மன ஆறுதல் போன்றவற்றை கூறி அவர்களை நல்ல தெளிவான சிந்தனைக்கு மாற்றலாம்.
5.ஆதாரவற்ற பெண்கள் என்றால் அவர்களிடம் சகோரத்துவத்துடன் பழக வேண்டும்.

தோழிகளே இவ்வுலகில் அனைவரும் உடன்பிறப்புகளுடனும் சொந்தங்களுடனும் பிறந்த நம் பெண்கள் பரிதவிக்கும் பொழுது மட்டும் ஏன் உதவ முன்வருவதில்லை.காரணம் நாம் நம்மை பற்றி தெளிவாக புரிந்து கொள்ளமால் இருப்பதே ஆகும்.நாமும் சாதிக்க பிறந்தவர்கள் நம்மால் தனியாக சிறப்பான வாழ்க்கை வாழமுடியும்.தோழர்களே தோழிகளே பெண்கள் நம் வாழ்க்கையின் பொக்கிஷம் போன்று அவர்களை நல்ல மனநிலையுடனும்.சிறப்பாக வாழவைக்க நாம் கடமைபட்டுள்ளோம் என்பதை சிந்தியுங்கள்.பெண்களை தனிமைபடுத்தி அவர்களின் குடும்பவாழ்க்கையின் தொலைக்க நிங்களும் காரணமாக இருந்துவிடாதிர்கள்.ஆதாரியுங்கள்.இன்றைய சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி தடுக்ககூடிய காரணிகளை கண்டறிந்து அவற்றை நீக்க முயற்ச்சியுங்கள்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

Saturday 4 April 2015

திருமணங்களும் அவற்றின் பின்னனியும் (விழிப்புணர்வு தொகுப்பு)

அன்பான தமிழ் தோழிகளே இனிய வணக்கம்
 பெண்ணாக பிறந்து இவ்வுலகில் தன் வாழ்க்கையை வாழ்ந்து நிறைவடைய செய்வதற்குள எத்தனை மாற்றங்கள் நம் பெண்கள் வாழ்க்கையில்.இன்றைய கால நம் இளம்பெண் தோழிகள் தங்கள் வாழக்கையை தேர்தெடுப்பதில் தங்களில் முழுவிருப்பமற்ற ஒரு மனநிலையுடன் வாழ்ந்துவருகின்றனர்.

தோழிகளே நம்மில் பலர் நல்லதொரு மனநிலை மற்றும் படிப்பறிவு பெற்றிருந்தும் தங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற துனைவர் அமைக்கலாம் என்ற  மனநிலையுடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு விருப்பமற்ற திருமண வாழ்க்கையில் அடியேடுத்தும் வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதே போன்று காதல் திருமணங்களிலும் நம் தோழிகள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம். 

வளர்ந்து வரும் உலகில் பெண்களின் வாழ்க்கை என்பது ஒரு சாதரான ஒன்றாக சென்றுவிட்டது.நம் பெண்களின் வருங்கால வாழ்க்கை துணைவர் நம்மை பற்றி புரிந்து கொள்ள கூடிய வகையிலும் அவருடைய பழக்கங்களையும் அவரை பற்றி முழுவிபரங்களையும் அறியாமால் இன்றைய கால திருமணங்களை நடைபெருகிறது.இதில் குறிப்பிடும் தகவல் என்னவென்றால் எதிர்கால குடும்ப வாழ்க்கையில் பெண்களை பாதுகாக்ககூடிய திட்டங்கள் வகுப்பது கிடையாது இன்றைய கால திருமணங்கள்.

Saturday 21 March 2015

பாதுகாப்போம் பெண்களை விழிப்புணர்வு கட்டுரை தொகுப்பு

அன்பான தமிழ் தோழிகளே
 வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஆண் பெண் என்ற வித்தயாசங்கள் மாறி ஒரே சமத்துவம் என்னும் கொள்கையுடன் வாழும் இந்த நாவ நாகரீக சமுதாயத்தில் நம் பெண் இனம் தற்சமய காலங்களில் அழிக்கப்பட்டு வருவதையும் அவர்களின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படுவதையும் கண்டு வருகிறோம் தோழிகளே.இந்த நிகழ்வுகள் ஏற்படுவதற்கான துமவ் காரணம் என்று பார்த்தால் அது பெண்சிசு கொலை மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளே .

தோழிகளே தற்சமய காலங்களில் நம் பெண் இனத்திற்கு எதிரான சம்பவங்கள் அறங்கேறி வருகிறது.ஒரு குடும்பத்தில் இருபாலரின் முழு விருப்பமுடன் நடைபெறும் திருமணபந்த வாழ்க்கையின் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடு.மற்ற குடும்ப ரீதியான பிரச்சனைகளை மையபடுத்தி நம் பெண்களுக்கு எதிராக அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படுகிறது.இவற்றின் முலம் தற்கொலைமுயற்ச்சி(குடும்பத்துடன் முயல்வது) கணவருடன் தனியாக பிரிந்து வாழும் முடிவுகள்.தேவையற்ற பழக்கங்கள் போன்றவற்றிற்கு ஆளாகும் சூழ்நிலைக்கு நம் தோழிகள் தள்ளப்படுகின்றனர்.இன்றைய சமுதாயத்தில் நம் பெண்களின் வாழ்க்கை நெருப்பின் எரியும் விறகுக்கு இணையாக சென்றுவிட்டது.தோழிகளே நம் பெண்களின் கல்வி வளர்ச்சி தற்சமய காலங்களில் நல்லதொரு முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது.இருப்பினும் இவற்றில் திருமணபந்த வாழ்க்கையின் இடைப்பட்ட பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக தங்களின் இல்லற வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.இன்னும் குறிப்பிடும்படி சொன்னால் நல்லதொருவாழ்க்கை துணைவரை தேர்ந்தெடுப்பது.குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பான மனபக்குவத்தை வளர்த்து கொள்வது கிடையாது இன்றைய படிப்பறிவு தோழிகள்.இவற்றை தங்களின் குடும்பகளின் சூழ்நிலைகளை புரிந்து கொள்வதன் முலம் மாற்றிகொள்ளலாம்.தோழிகளே நம்மில் பலர் நம் பெண் இனத்திற்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளுக்கு குரல் கொடுக்கும் மனநிலைபடைத்தவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள்.

இன்றைய தினம் கருகலைப்பு.பெண்சிசுகொலை போன்ற பெண்களுக்கு எதிரான கொடிய நிகழ்வுகள் சமுதாயத்தில் மறைமுகமாக நடைபெறுகிறது.இது தொடர்பான விழிப்புணர்வை அரசு மற்றும் மகளிர் நல தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.இருந்த போதிலும் இன்றைய பெண்களுக்கு குடும்ப அங்கத்தினரின் துண்டுதலின் முயற்ச்சியில் கருகலைப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.இதன் தாக்கம் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு எற்படும் தடைக்கல்.தோழிகளே நம் பெண்இனம் இல்லையேல் உலகவியல் என்பது கிடையாது.அப்படிபட்ட சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகளுக்கு உடன்பட்டு செல்ல கூடாது.நாமே நம் பெண் இனத்திற்கு எதிராக செயல்பாடுவதை தவிர்த்து பெண்களை முன்னேற்ற வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்ல முயற்ச்சிக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் பெண்குழந்தைகளின் சிறப்பான வளர்ச்சியே வருங்கால சமுதாயத்தின் அஸ்திவாரம் என்பதை சிந்தித்து பெண்சிசு கொலை.பெண்களை வன்கொடுமைபடுத்துவதை தவிர்க்க கூடிய மனநிலையும். அது தொடர்பான விழிப்புணர்வையும் ஆண் பெண் இருபாலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலிய தொடர்பான பிரச்சனைகளினால் நம் பெண் சமுதாயம் சிக்கி பரிதவிக்கிறது.ஒரு குடும்பத்தில் ஆண் தோழரிகளின் சிறப்பான வழி நடத்துதல். மற்றும் பெண்களை மதிக்ககூடிய பண்புகளை பெற்றுள்ளார் என்றால் அக்குடும்பம் சமுதாயத்தில் சிறப்பான குடும்பமாக இருக்கும்.

பெண்களுக்கான மரியாதை மற்றும் பாதுகாப்பு தரக்கூடிய வழிமுறைகள்
1. பெண்களை மதிக்கவும் ஆண்களை போன்று அவர்களையும் சம உரிமையுடன் வழிநடத்த கூடிய மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும்.
2.பெண்சிசுகொலை அல்லது கருகலைப்பை தடுக்ககூடிய முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் மேலும் அது தொடர்பான விளைவுகளை பற்றி பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
3.பெண்களின் மீது நடத்தபடும் தாக்குதல்.பாலிய கொடுமை வரதட்சனை கொடுமை போன்றவற்றில் இருந்து தற்காத்து கொள்ளகூடிய சட்ட ஆலோசனைகளை பற்றி பெண்களில் தெரிந்து கொள்ளவேண்டும்.
4.சிறு பெண்குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குழந்தை திருமணங்களையும் கட்டாய திருமணங்களையும் தவிர்க்க வேண்டும்.
5.பொது இடங்களிலும் வீடுகளிலும் அலுவலகங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
6.தேவையற்ற முடிவுகளை(தற்கொலை முயற்ச்சி.கணவரை பிரிதல்.தாகாத பழக்கங்களின் உறவுகள்) போன்றவற்றின் பின்விளைவுகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.அவற்றில் இருந்து மீளக்கூடிய மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும்.
7.தனிப்பட்ட முறைகளில் ஆதாரவு இன்றி பரிதவிக்கும் பெண்களுக்கு அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவ வேண்டும்.
8.பெண்குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பெண்களின் உயர்கல்வி தொடர்பான பெற்றோர்கள் நல்ல முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்
9.பெற்றோர்கள் தங்களின் பெண்குழந்தைகளுக்கு மற்றும் இளம்பெண்களுக்கும் இன்றைய கால சூழ்நிலைகளை பற்றியும் அவற்றில் இருந்து எவ்வாறு வாழ்ககையை நல்வழியில் வழிநடத்திசெல்லகூடிய அணுகுமுறைகளை பற்றி அவ்வப்பொழது தனிப்பட்ட நேரங்களில் அவர்களுக்கு எடுத்துகூறவேண்டும்.

அன்பான தோழர்களே தோழிகளே சமுதாயத்தில் பெண்களும் சுதந்திரமான மற்றும் பாதுகாப்புடன் வாழ நாம் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.இன்றைய சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய பெண்களும் முக்கிய பங்காற்றும் நிலையில் அவர்களையும் அடிமை கோட்பாடில் இருந்து விடுவித்து சம உரிமை அதிகாரத்துடன் வாழ அனைவரும் ஒன்றினைவோம்.நாட்டில் பெண்குழந்கைகளின் வளர்ச்சியை அதிகரிப்போம்.வருங்கால பெண் சமுதாயத்தை மறுமலர்ச்சி அடைய செய்வோம்.
 தொகுப்பு தமிழ்அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி

Sunday 8 March 2015

இணையதள குற்றங்கள்-சீரழியும் பெண்கள் சமுதாயம்

அன்பான தமிழ் தோழிகளே

வளர்ந்து வரும் உலகில் அனைத்து துறைகளிலும் சிறப்பான இடத்தினை பெற்றுவரும் பெண்களுக்கு இன்றைய இணையதளங்கள் ஒரு அச்சுறுத்தலாக  உள்ளது.இன்றைய படித்த பெண்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இணையதளங்கள் என்பது இன்றியாமையாத ஒன்றாக உள்ளது.அப்படிபட்ட அந்த இணையதளங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாச படங்கள் மற்றும் ஒருவரை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் என அதிகம் காணக்கூடியதாக உள்ளது.இன்றைய கால மக்களின் அதிக பயன்பாட்டில் இருப்பது இணையதளங்கள்.இவற்றில் கல்லுரி.பள்ளி பயிலும் வருங்கால இளைய சமுதாயங்களும் இணையதளங்களை பயன்படுத்துவது குறிப்பிடதக்கது.

தோழிகளே மற்ற வளர்ந்த நாடுகளில் பெண்கள் தொடர்பான ஆபாசபடங்கள் மற்றும் வீடியோகாட்சிகள் அடங்கிய இணையதளங்களை கட்டுபடுத்திவிடுகின்றனர்.ஆனால் வளரும் நாடுகளில் மட்டும் பெண்களை இழிவுபடுத்தகூடிய இணையதளங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து தான் வருகிறது.ஆனால் இவற்றை கட்டுபடுத்துவது கிடையாது.இணையதள குற்றங்கள் முதலில் தொடங்குவது காதல் பழக்கங்கள்.பெண்களை வசிகபடுத்துதல் மற்றும் பல.தோழிகளே இன்றைய கால பழக்கங்கள் மற்றும் காலச்சர சிரழிவுகள் தான் நாம் பெண்களை வித்தியாசமான நோக்கத்தில் மானபங்கம் செய்து வருகிறது இணையதளங்கள் முலமாக.காதல் என்னும் பழக்கங்களில் தன்னை நம்பிய பெண்களை அவர்களுக்கு தெரியமால் ஆபாசகாட்சிகள் பிடித்து இணையதளங்களில் பரப்பி வருகிறது ஒரு சில மனிதபிமானம் அற்ற ஆண் தோழர்கள்.மேலும் இந்த காதல் வலையில் சிக்கிய பெண்கள் நம்பிக்கையற்ற இளைஞர்களிடம் தங்களின் ஆபாசகாட்சிகள் முலம் அவர்களின் கட்டுபாட்டில் சென்று தங்களின் வாழ்க்கையை முற்றிலும் தொலைத்து விடுகின்றனர்.குறிப்பாக இந்நிகழ்வுகளில் கல்லுரி மற்றும் பள்ளி பயிலும் ஒன்றும் அறிய பெண்குழந்தைகளும் சிக்கி கொள்கின்றனர்.இதை தவிர இளம் வயதில் பணிபுரியும் இளம்பெண்களும் சிக்கி கொள்கின்றனர்.

இன்றைய இணையதளங்களில் ஆபாசகாட்சிகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்று பார்த்தால் பெண்கள் இது தொடர்பான நிகழ்வுகளில் விழிப்புணர்வு இல்லமால் இருப்பதே ஆகும்.கல்லுரி பயிலும் தோழிகளே நாம் இணையதளங்கள் தொடர்பான படிப்பினையும் அது தொடர்பான தொழில்நுட்பகளை அறிந்திருக்கிறோம்.எனவே நம் பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய இணையதளங்களை முடக்குவதற்கான முயறச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இல்லதர பெண்களையும்.பணிபுரியும் அலுவலக பெண்களையும் ஆபாச பாடங்களாக சித்தரித்து இணையதளங்களில் பரப்புவதும் அறங்கேறிவருகிறது.இவ்வறான நிகழ்வுகளில் ஒன்றும் அறிய இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் வீபரித முடிவுகளுக்கு செல்லும் நிலை சமுதாயத்தில் அறங்கேறி வருவதை நாள்தோறும் நாளிதழ்கள் முலம் காண்கிறோம்.மேலும் ஒரு சில பெண்கள் இந்நிகழ்வுகளினால் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டம் (பணம் கொடுப்பது).போன்றவகைளும் நடைபெறுகிறது.ஒருவருக்கு தெரியாமல் அவரை பற்றி எடுக்கும் ஆபாசகாட்சிகளை இணைதளங்களில் பரப்புவதனால் அதை காண்பவர்கள் அந்த பெண்களிடமோ அல்லது குடும்ப நண்பர்களுக்கு தெரியபடுத்தும் பொழுது பாதிப்படைந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் பாதிப்படைகிறது.

தோழிகளே இன்றைய காலத்தில் நம் பயன்பாட்டில் கையடக்க அதிநவின தொலைப்பேசி போன்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.அவற்றில் இணையதளங்கள் பயன்படுத்தும் வசதிகளும் அடங்கியிருப்பதால் இது போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுவர்களுக்கு எளிமையான ஒன்றாக அமைகிறது.தோழிகளே இணையதளங்களில் தவறுகள் ஏற்படுவதை குறைப்பதற்கு நாம் விழிப்புணர்வை அனைத்து தரப்பு பெண்களுக்கும் குறிப்பாக கிராம புற படிப்பறிவு அற்ற பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இணையதள குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள சில வழிமுறை யோசனைகள் தோழிகளுக்காக
1.கல்லுரி .பள்ளி பயிலும் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது உடல் முழுவதும் முடிமறைக்ககூடிய ஆடைகளை அணியுங்கள்.
2.காதல் என்னும் மாயபோர்வையில் சிக்கிய இளைஞர்களிடமோ அல்லது ஆண்களிடமோ நாம் தனி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.அவர்களிடம் கட்டுபாட்டுடன் இருப்பதற்கான மனதினை வளர்த்து கொள்ள வேண்டும்.
3.கிராமப்புறங்களில் படிப்பறிவு அற்றவர்களிடம் படித்த தோழிகள் இது தொடர்பான பிரச்சனைகளில் தாற்காத்து கொள்ள கூடிய வழிமுறைகளை கூறுங்கள்.
4.இணையதளங்களில் நமக்கு தெரிந்தவர்களின் ஆபாசகாட்சிகள் இருப்பதை அறிந்தால் அது தொடர்பாக காவல் நிலையங்களில் தெரியபடுத்தி அக்காட்சிகளை படங்களை நீக்க முயற்ச்சியுங்கள்.
5.பெண்கள் படிக்ககூடிய பள்ளி.கல்லுரிகளில் இது தொடர்பான பிரச்சனைகளில் தாற்காத்து கொள்ளகூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தலாம்.
6.பொது இடங்கள்.பொது கழிப்பிடங்கள்.உடை மாற்றும் அறைகளில்.மற்றும் அதிகம் பழக்கமற்ற நண்பர்களுடன் தங்கும் பொழுது சுற்றும் முற்றும் கவனிக்க வேண்டும்.
7.பொது இடங்கள்.பூங்கா.கடற்கரை மற்றும் சில இடங்களில் தோழிகள் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் பொழுது உங்களை சுற்றி சந்தேகபடக்கூடிய நபர்கள் இருக்கிறர்களா எனவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
8.விழா காலங்களில் மற்றும் இரவு பயணங்களின் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும்.இரவு நேர விடுதிகளில் தங்குவதை தவிர்க்கவும்.
9.குழந்தைகள் பயன்பாட்டில் உள்ள இணையதள பயன்பாட்டு பொருள்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்.அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கவும்.
10.பெண்கள் முடிந்த வரையிலும் தங்களின் புகைப்படங்களை இணையதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள்.
11.இணையதளங்களில் ஆபாச காட்சி படங்கள் தங்களை பற்றி இருந்தால் அவற்றை நீக்க முயற்ச்சியுங்கள்.வீபரித முடிவுகளை மேற்கொள்வதை தவிர்க்கபாருங்கள்.பெற்றோரிடம் மறைமுகமாக தெரியபடுத்துங்கள்.
12.சந்தேகத்திற்குரிய நபர் இது தொடர்பான படங்களை இணையதளங்களில் பரப்புகிறார் என்றால் பெண்கள் உடனடியாக அவர்களை புகார் செய்யுங்கள்.
13.இது தொடர்பான பிரச்சனைகளில் சிக்கிய பெண்களை வெறுக்காதீர்கள்.அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அரவணைப்புடன் இருக்க முயற்ச்சியுங்கள்.நடந்த உண்மைகளை பற்றி புரிந்து கொள்ளுங்கள்.
14.பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும்  அவர்களின் நடவடிக்கைகளை பற்றி தனி கவனம் செலுத்தி கவனித்து வர வேண்டும்.
அன்பான தோழர்களே பெண்களே என்பவர்கள் தெய்வங்களுக்கு ஓப்பானவர்கள்.நமது குடும்பகளில் நமது உடன்பிறந்தவர்கள் பெண்கள் என்பதை சிந்தியுங்கள்.பெண்களும் இவ்வுலகில் ஆண்களை போன்று வாழ பிறந்தவர்கள் தான்.பெண்களை மதிக்க பழகுங்கள்.அவர்களை அநாகரீக முறைகளில் சித்தரிக்க கூடிய வகையிலான படங்களை பரப்புவதை தடுக்க முயற்ச்சியுங்கள்.பரப்பவும் செய்யாதீர்கள்.

அன்பான ஆண் மற்றும் பெண் நண்பர்களே தங்களை இணையதளத்தின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.தயவு செய்து பெண்களை தவறான முறைகளில் படம் படிப்பதை தவிர்க்க பாருங்கள்.பெண்கள் நாட்டின் வீட்டின் கண்கள்.அப்படிபட்ட பெண்களை தவறான முறைகளில் அவர்களின் வாழ்க்கை பாதிப்படைய கூடிய வகையிலான படங்களை இணையதளங்களில் பரப்பி பெண் சமுதாயத்தை இழிவுபடுத்துவதை தடுக்க முயற்ச்சி செய்யுங்கள்.ஒரு நாட்டில் சிறப்பான சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் பெண்களை இழிவுபடுத்துவது தொடர்பான குற்ற செயல்களை தடுப்பதன் முலமே புதிய மறுமலர்ச்சி சமுதாயத்தை உருவாக்கலாம்.தொழில்நுட்ப வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சிக்கும் தனி நபர் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டுமே தவிர இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் புரிவதற்கு பயனபடுத்த கூடாது என உறுதிமொழி மேற்கொள்வோம்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி


Saturday 21 February 2015

தமிழ் பெண் சுதந்திரம் சிறுகட்டுரை

அன்பான தமிழ் பெண் தோழிகளே இனிய தமிழ் வணக்கங்கள்

ஒரு தமிழ் பெண் விட்டின் குலமகளாகவும் நாட்டின் திருமகளாகவும் போற்றகூடிய அற்புத ஒளிவிளக்கு நம் தமிழ் பெண்கள்.ஆதிகால இதிகாசங்களில் நம் தமிழ் பெண்களின் சுதந்திரம் மற்றும் நடைமுறை பழக்கங்களை பற்றி மிக உன்னதமான கருத்துகளையும் காவியங்களாக படைத்து பெண்ணுரிமை பற்றி எடுத்துரைத்துள்ளனர் பலம்பெரும் புல வர்கள் மற்றும் கவிஞர்கள் என்பதை நாம் இன்றுவரை அறிந்த ஒன்றே.இதே போன்று அரச குலங்களில் அன்றைய காலங்களில் வாழ்ந்த தமிழ் பெண்களின் சுதந்திரத்தை அனைவரும் போற்றும் வகையில் அரசர்கள் பல்வேறு செயல்பாடுகள் தொடங்கப்பட்டதை இதிகாச புராணங்களின் கதைகள் முலம் அறிந்திருப்போம் தோழிகளே.

ஒரு பெண் இன்றைய சூழ்நிலையில் மாற்றங்களை எற்படுத்த முடியாமல் தடுக்ககூடிய காரணிகள் என்று பார்த்தால் ஆணாதிக்கம் என்னும் அடிமை சாசனம்.இன்றைய நவின காலங்களில் நம் தோழிகள் ஒரு சுதந்திரமான முடிவுகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.இதற்கு காரணம் அடிமை என்னும் கோட்பாடில் தான் வாழ்கிறோம் என்னும் மன நிலையே.ஆண் தோழர்களுக்கு மத்தியில் ஒரு கூண்டில் அடிமைபட்ட பச்சை கிளியை போன்றுதான் நம் வாழ்க்கை.சமுதாயத்தில் நமக்கான வாழ்வியல் நடைமுறை உரிமைகள் சுதந்திரமானதாக இருந்தாலும் அவை ஒரு சில தோழிகளுக்கு மட்டுமே.

சட்ட்ங்களும் பல்வேறு சலுகைகளும் நம் பெண்குலங்களுக்கு வழிவகுத்தாலும் அவை ஒரு சில வழிகளில் மட்டுமே பெண்ணுரிமை சுதந்திரத்தை தருகிறது.சுதந்திரமான முடிவுகளை மேற்கொள்ள கூடிய அற்புத காலங்கள் நம்மை நெருங்கிழினாலும் அவை நம் பார்வைக்கு நெடுந்தொலைவுகளாகவே உள்ளது.காரணம் நம் பெண் தோழிகளின் மனதில் இருக்கு ஒரு விதமான மன கட்டுபாடு அற்ற ஆசை குணதியசமே.(இரக்கமற்ற குணம்.பணஆசை.பொருளாஆசை).நம் பெண்குலத்தையும் அவர்களின் சுதந்திரதையும் காக்ககூடிய முதல் பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்தோழிகளே நம் பெண்குழந்தை பருவம் முதல் முதிர்மை வயதுவரை ஒரு சுதந்திரம் அற்ற மனநிலையுடனே வாழ்கிறோம்.நாமும் ஆண் தோழர்களுக்கு இணையாக சுதந்திரமாக வாழ தகுதி படைத்தவர்கள் தான்.பின்பு என் இந்நிலைப்பாடு.தோழிகளே முதலில் நமக்குள் ஒற்றுமை என்பது இல்லாதவரை நம் பெண்குலம் சுதந்திரமான காற்றை முழுமையாக பெற முடியாத ஒன்றாக சென்றிடும்.சமுதாயத்தில் மாற்றங்கள் பல இருந்தாலும் நம் பெண் இனத்திற்கு குறைவான ஒன்றுதான்.

தோழிகளே சுதந்திர உரிமைகளை நம் இல்லறத்திலும் சமுதாயத்திலும் மீட்டெடுக்கும் ஒரு தமிழ் பெண்ணாக மாறிடுவோம்.நம் பெண் இனத்தின் சுதந்திரமான வளர்ச்சியே நாட்டையும் வீட்டையும் முன்னேற்றமடைய செய்யும் ஒரு மாபெரும் பெண்சக்தி என்பதை அறிவோம்.ஒற்றுமை நம் தோழிகளின் இன்றியாமையாத ஒரு சக்தி.
தோழிகளே நம் அனைவரும் ஒன்றினைந்து வாழ்க்கையிலும்.மற்ற இன்னல்களிலும் பரிதவிக்கும் அவர்களை மீட்டெடுக்க உதவுவோம்.வருங்கால பெண் சமுதாயத்தின் சுதந்திரமான வாழ்க்கைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்.
தொகுப்பு:தமிழ் அன்னை பெண்கள் இணையதளம் உங்களில் ஒருத்தி